செய்திகள்
சிராக் பாஸ்வான்

நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக முடியாது - சிராக் பாஸ்வான்

Published On 2020-11-03 10:08 GMT   |   Update On 2020-11-03 10:08 GMT
பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2-ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களித்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

" நிதிஷ் குமார்  பீகார் முதல்வராக மீண்டும் ஆக முடியாது. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள். முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிதிஷ்குமார் முகத்தில் அச்சத்தை காண முடிகிறது.  நிதிஷ் குமாருக்கு வாக்களித்து பீகார் மக்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்” என்றார். 
Tags:    

Similar News