செய்திகள்
சஞ்சய் நிருபம்

சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் - சஞ்சய் நிருபம் தாக்கு

Published On 2020-09-28 04:08 GMT   |   Update On 2020-09-28 04:08 GMT
சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
மும்பை:

தேவேந்திர பட்னாவிசை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பற்றி மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில். “ தலைப்பு செய்திகளில் இடம்பெற சஞ்சய் ராவத் அவசரம் காட்டுகிறார். அது நடக்கும்போது அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என்றும், ஆனால் இது எனது தவறான விருப்பம் அல்ல, அது உண்மை ” என்று விமர்சித்தார்.

மேலும் சஞ்சய் நிருபம் கூறுகையில், “ வேளாண் மசோதாக்களை காங்கிரஸ் தீவிரமாக எதிர்ப்பதாக இருந்தால், முதலில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும். இந்த மசோதாக்களை பற்றி உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

மக்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டபோது, அக்கட்சி வெளிநடப்பு செய்தது. மராட்டிய விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர் ” என்றார்.

Tags:    

Similar News