search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Rawat"

    • பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.
    • உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் வந்து இருந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச நானும், தேவேந்திர பட்னாவிசும் சென்றோம். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக ஒத்துக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் உத்தவ் தாக்கரே கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சோ்ந்து கொண்டார். ஆட்சியை கவிழ்த்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறாா்கள். நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவில்லை.

    உங்களின் நாடகத்தால் விரக்தி அடைந்த சிவசேனா தொண்டர்கள் தான் ஆட்சியை கவிழ்த்தனர். அவர்கள் தேசியவாத காங்கிரசுடன் இருக்க விரும்பவில்லை, எனவே விலகி வந்தனர், என பேசியிருந்தார்

    இந்தநிலையில் அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவது நல்லது தான். அவர்கள் கட்சியை உடைத்தனர், கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துரோகிகளுக்கு கொடுத்தனர். தற்போதும் கூட அவர்களுக்கு உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    அமித்ஷா 20 நிமிடங்கள் பேசியுள்ளார். இதில் 7 நிமிடங்கள் அவர் உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசியுள்ளார். அவரது பேச்சு வேடிக்கையாக இருந்தது.

    அந்த கூட்டம் பா.ஜனதா மகா சம்பர்க் அபியானுக்காக நடந்ததா அல்லது உத்தவ் தாக்கரேயை விமர்சிக்க நடந்ததா என ஆச்சரியமாக உள்ளது. உத்தவ் தாக்கரேவிடம் கேட்ட கேள்விகளை பா.ஜனதா தங்களுக்குள் கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இதேபோல பரூக் அப்துல்லா, மெபூபா முப்தி, நிதிஷ்குமார், மாயாவதி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பா.ஜனதா கூட்டணி வைத்த போது, இந்துத்வா எங்கு போனது என அமித்ஷாவுக்கு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.

    மும்பை :

    ரூ.2 ஆயிரம் நோட்டு தடை முடிவு குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-

    கர்நாடகம் ஒரு முக்கியமான தென் மாநிலம். அங்குள்ள மக்கள் பல்வேறு நம்பிக்கை கொண்ட பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன. மக்கள் தங்கள் நம்பிக்கையையோ, மத விருப்பத்தையோ மறைக்க மாட்டார்கள். இருந்தபோதிலும், கர்நாடக மக்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜனதாவை நிராகரித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதில் பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று தெரியவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள பா.ஜனதா கற்றுக்கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா அல்லது பிரதமர் மோடி மீது எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும்போது, அவற்றை நீர்த்து போகச் செய்ய சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவு தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற்றது ஆகும். பிரதமர் மோடி தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
    • தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

    மும்பை :

    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரசாரம் செய்த பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவை தான் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு காரணம்.

    இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தோல்வி. கர்நாடகத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 பாராளுமன்ற தேர்தலிலும் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.
    • இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.

    நாசிக் :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இன்றி அவரது அணியை சேர்ந்த மற்ற 24 எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

    இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். 3 மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது
    • எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகா விகாஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இவரின் பேச்சு கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்வியை எழுப்பியது.

    இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இது குறித்து நேற்று கூறியதாவது:-

    மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்கவே இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வருகிற மே 1-ந் தேதி அன்று மும்பையில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடக்கும். மகா விகாஸ் அகாடி மூத்த தலைவர்கள் அனைவரும் அந்த மேடையில் ஒன்று கூடுவார்கள்.

    மகா விகாஸ் கூட்டணியை உருவாக்குவதில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்துள்ளார். நாம் ஒன்றாக இருந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடித்து அதிக எண்ணிக்கையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று அவர் கருதுகிறார். அவரது பேச்சுகள் திரித்து கூறப்படுகிறது. மகா விகாஸ் அகாடி இணைந்து தேர்தலை சந்திக்கும்.

    மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அல்லது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என யாராக இருந்தாலும், பா.ஜனதாவை வலுப்படுத்த இந்த கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றன. அவர்களிடம் உண்மையானவர்கள்(ஒரிஜினல்) யாரும் இல்லை. எல்லாம் போலிகள் தான் உள்ளன. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஊழல்வாதிகளை நேர்மையானவர்களாக மாற்றும் வாஷிங் மெஷின் தொழிலை பா.ஜனதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா விரும்பியதை செய்ய தவறியதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மாற்றுவதற்கான முயற்சி திரைக்கு பின்னால் நடந்து வருகிறது.

    எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு முதல்-மந்திரியாக, அவர் மராட்டியத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த தவறிவிட்டார். இந்த அரசை அமைத்ததில் இருந்து பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உண்மையான சிவசேனா யாருடையது என்று பாகிஸ்தானுக்கு கூட தெரியும் என்று கூறியதை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சிப்பவர்கள் தேர்தல் வெற்றி பெற பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்த கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரை எடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏக்நாத் ஷிண்டே அரசு 20 நாட்களுக்குள் கவிழ்ந்து விடும் என்று நேற்று முன்தினம் சஞ்சய் ராவத் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அரசுக்கான சாவு மணி தயாராக உள்ளது.
    • அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவி போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால் இந்த கட்சியால் 2½ ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடிந்தது. சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பால் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.

    துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். அதுமட்டும் இன்றி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி சட்டப்போராட்டத்தின் மூலமாக சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னத்தையும் கைப்பற்றியது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது முதல்-மந்திரி அவரின் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆட்சி அடுத்த 15-20 நாட்களில் கவிழும். இந்த அரசுக்கான சாவு மணி தயாராக உள்ளது. யார் மணியை அடிக்க வேண்டும் என்பது தான் முடிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதமே கவிழ்ந்துவிடும் என ஏற்கனவே சஞ்சய் ராவத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாம்னாவில் சஞ்சய் ராவத் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
    • எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான "சாம்னா"வில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரையில் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

    இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்தபோது, "யாராவது (அஜித்பவார்) தனிப்பட்ட முடிவை எடுத்தாலும், தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் ஒருபோதும் சேராது" என்று சரத்பவார் கூறியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாக வெளியாகும் ஊகங்களுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்த அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் சஞ்சய் ராவத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார். இதுபற்றி அவர், "தற்போது மற்ற கட்சியை சேர்ந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல நடந்துகொள்வதாக" கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டுமே எனது நம்பத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியும். நான் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறேன். நான் பத்திரிக்கையில் அப்படி ஒன்றும் தவறாக எழுதவில்லை.

    எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும். சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லையா? தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயற்சி நடக்கவில்லையா?

    இதை சரத்பவார் கூட கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சரத்பவார் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றிய தகவல்களை நான் முன்வைப்பதில் என்ன தவறு?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை புதிய பாராளுமன்ற நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.
    • பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மும்பை :

    பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டமேற்படிப்பு படித்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புரட்சிகரமானது. பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை அவர் கட்டிய புதிய பாராளுமன்ற பிரதான நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும். அவரது கல்வி தகுதியை பாராளுமன்றமும், நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மர்மம் என்ன?. இதை ஏன் மறைக்க வேண்டும்?.

    பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
    • பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது.

    மும்பை :

    காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சமீபத்தில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து உத்தவ் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரை வெளியானது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, தற்போதும் இருக்கிறது. இருப்பினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து வெறும் காகிதமாக மட்டுமே உள்ளது. அதுமட்டும் இன்றி இந்த நடவடிக்கை பா.ஜனதா கட்சி தனது அரசியல் லாபத்துக்காக மட்டுமே மேற்கொண்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் படும் துயரங்களுக்கு பா.ஜனதா தலைவர்களிடம் பதில் இல்லை.

    சமீபத்தில் கூட புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

    ஆனால் டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மணீஷ் சிசோடியாவை ஊழல் வழக்கில் கைது செய்ததன் மூலமாக பண்டிட்டுகளின் பிரச்சினையில் இருந்து அரசு மக்களை திசை திருப்பியது.

    ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்வதற்காக நான் சமீபத்தில் வடக்கு யூனியன் பிரதேசத்திற்கு சென்று இருந்தேன். அப்போது காஷ்மீர் பண்டிட் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இந்த அரசு வலுக்கட்டாயமாக மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்வு செய்கிறது. இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்கு அரசு எந்த உத்தரவாதமும் வழங்க தயாராக இல்லை என்று என்னிடம் கூறினார்.

    சமீபத்தில் லவ் -ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மும்பையில் "இந்து ஆக்ரோஷ் மோர்சா" போராட்டத்தை வலதுசாரி அமைப்புகள் நடத்தின. அவர்கள் காஷ்மீர் பண்டித் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, இதை அங்குள்ள மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர்.
    • மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி.

    மும்பை :

    மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகரை சந்தித்தார்.

    சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர். அவர்கள் இங்கு வாக்காளர்களை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டனர். கஸ்பா டிரைலர் தான். இன்னும் ஒட்டுமொத்த மராட்டியமும் பாக்கி உள்ளது. மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி. மகாவிகாஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நான் சட்டசபை உறுப்பினர்களை மதிக்கிறேன். சட்டசபையில் ஒரு குழுவை தான் திருடர்கள் என நான் கூறினேன். இது எல்லோருக்கும் தெரியும். எல்லா சட்டசபை உறுப்பினர்களையும் திருடன் என அழைப்பவன் நான் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கு அரசியல் அமைப்பு, சட்டம் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
    • சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்" என்றார்.

    சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

    • 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார்.
    • இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை.

    ஸ்ரீநகர் :

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோது ராகுல்காந்தி தனது ஆளுமை குணங்களை தற்போது வெளிக்காட்டியுள்ளார். 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார். ராகுல்காந்தி அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்.

    இந்திய பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவராலும் நடைபயணம் மேற்கொள்ள முடியாது. இந்த நடைபயணத்திற்கு திடமான மன உறுதியும், நாட்டின் மீதான அன்பும் தேவை. நாட்டின் மீதான அக்கறையை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை. பிரதமராக தனக்கு விருப்பமில்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டால் அவருக்கு வேறு வழியில்லை' என்றார்.

    ×