செய்திகள்
எஸ்.ஆர்.எஸ்.யாதவ்

உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் பலி

Published On 2020-09-08 19:20 GMT   |   Update On 2020-09-08 19:20 GMT
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.எஸ்.யாதவ் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.எஸ்.யாதவ்வுக்கு கொரோனா இருப்பது கடந்த 1-ந்தேதி உறுதியானது. இதனையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 87. உன்னோ மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஆர்.எஸ்.யாதவ், அரசு துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கடந்த 1992-ம் ஆண்டு ஓய்வுபெற்றவர். அதன்பின்னர் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

எஸ்.ஆர்.எஸ். யாதவ்வின் மறைவுக்கு முன்னாள் முதல்-மந்திரியும், கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News