செய்திகள்
ராஜீவ் தியாகி

டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மாரடைப்பால் மரணம்

Published On 2020-08-12 16:41 GMT   |   Update On 2020-08-12 16:41 GMT
டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணமடைந்தார்.
லக்னோ:

காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ராஜீவ் தியாகியும் ஒருவர். இவர் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளராகவும், செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இவர் இன்று மாலை 5 மணியளவில் ஹிந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் வைஷாலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ராஜீவ் தியாகிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி ராஜீவ் தியாகி உயிரிழந்தார்.

கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணமடைந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட பலரும் ராஜீவ் தியாகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News