செய்திகள்
பாதுகாப்புப்படை வீரர்கள்

புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு

Published On 2020-08-12 04:17 GMT   |   Update On 2020-08-12 04:17 GMT
புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் உடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் ஏ.கே. துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

அதேவேளையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
Tags:    

Similar News