செய்திகள்
ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 2,17, 040 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 1939 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,29,615 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 85, 486 பேர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.