செய்திகள்
காய்ச்சல் பரிசோதனை முகாம்

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

Published On 2020-08-08 14:33 GMT   |   Update On 2020-08-08 14:33 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று மேலும் 12,822 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய அளவில் தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகராஷ்டிராவில் 10 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 5,03,084 ஆக உயர்ந்துள்ளது. இன்று 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 17,367 ஆக உயர்ந்துள்ளது.  1,47,048 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News