செய்திகள்
யோகி ஆதித்யநாத்

மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன்: யோகி ஆதித்தயநாத் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Published On 2020-08-07 13:29 GMT   |   Update On 2020-08-07 13:29 GMT
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் எனக்கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்றுமுன்தினம் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர், பிரதமர் மோடி கலந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான விழாவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது.

தொலைக்காட்சி ஒன்றில் ‘‘என்னிடம் ஒரு முதலமைச்சராக நீங்கள் கேட்டால், எந்த மதம் அல்லது சமுதாயம், நம்பிக்கை குறித்து எனக்கு பிரச்சினை இல்லை. என்னிடம் ஒரு யோகி அல்லது இந்துவாக கேட்டால் கலந்து கொள்ளமாட்டேன். என்னுடைய வழிபாட்டு முறையை வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது’’ என்று கூறியிருந்தார்.

அதற்கு முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ‘‘உத்தர பிரதேச மாநில மக்களிடம் யோகித் ஆதித்ய நாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News