செய்திகள்
பிரதமர் மோடி

குஜராத் மருத்துவமனை தீவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2020-08-06 03:23 GMT   |   Update On 2020-08-06 03:23 GMT
குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில், குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும். மீட்புப் பணிகள் குறித்து முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் பேசியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News