செய்திகள்
அயோத்தி ராமர் கோவில்

ராமர் கோவிலுக்கு பூமி பூஜை - அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-08-04 21:42 GMT   |   Update On 2020-08-04 21:42 GMT
அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
அயோத்தி:

அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதலும் நடக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவுக்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வுகளையொட்டி கொரோனா மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக அயோத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நகருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடைகள் வைத்து அடைத்து உள்ளனர்.

அயோத்தி நகரில் உள்ளூர்வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களது அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அயோத்தியில் கோவில்கள், மசூதிகள் திறந்திருந்தாலும் இன்று வேறு எந்த மதச்சடங்குகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News