search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவின் 9-வது நாளான இன்று ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    • சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
    • சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.

    இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    • கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
    • ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

    அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    • வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.

    கோவை:

    கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த நடனத்தை இப்போது பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நடனத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள் என ஏராளமா னோர் உற்சாகத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக கோவில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வள்ளி கும்மி நடனம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வள்ளி கும்மி நடனம் ஆடுவது கவருவதாக அமைந்துள்ளது. வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மங்கை வள்ளி கும்மி நடனக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் முன்பு தங்கள் பாரம்பரிய வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றி அங்கு திரண்டு இருந்த வடமாநில பக்தர்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாங்களும் இந்த கலையை கற்க விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி மங்கை வள்ளிக்கும்மி குழுவின் தலைமை பயிற்சியாளரான பொங்கலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 477 பேருடன் ரெயில் மூலம் அயோத்தி சென்றோம். அயோத்தி ராமபிரான் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வெகுவாக கண்டு ரசித்தனர். நடனம் நிறைவு பெற்றதும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர், எங்களுக்கும் வள்ளி கும்மி கற்றுத் தாருங்கள் என்று மனம் திறந்து கேட்டனர். வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

    பண்டைய காலம் முதலே கும்மி ஆட்டம் என்பது அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்துக்கு கும்மி கொட்டுதல், அதாவது கை கொட்டுதல் என்று பொருள். இது தற்போது காலமாற்றத்துக்கு ஏற்ப மெல்ல நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், கைக்கொட்டி அடித்தல், இணையுடன் சேர்ந்து கைகளை கொட்டுதல் என்று 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.


    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் மாரியம்மன், முருகன் கோவில் திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்து கும்மி அடிப்பது வழக்கத்தில் உள்ளது. அதாவது முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன்பாக 6 நாளும், கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடுவோம். அப்போது பல்வேறு கருத்துக்கள் செறிந்த பாடலைப் பாடி கும்மியடித்து ஊர் மக்கள் முன்னிலையில் பண்டைய கால பழக்கவழக்கங்களை நினைவு கூறுவோம்.

    எங்களின் வள்ளி கும்மி குழுவில் பெரும்பாலும் நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் பாடப்படுவது உண்டு. அகநானூறு, சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் பூந்தட்டு, குலவை, தீபம், கதிர், முளைப்பாரி என கும்மியில் பல்வேறு வகைகள் உண்டு. இதற்கான இலக்கியங்களும் சாத்திரங்களில் நடைமுறையில் உள்ளன. அவற்றில் வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கும்மி என்பது உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வு அளிக்கும் சிறந்த கலை ஆகும். வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கு மருந்து, மாத்திரை இன்றி உடலில் நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் குறைந்து உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்புகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

    வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2.5 மணி நேரம் ஆகும். கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி த்தொகை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
    • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணிநேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறினார்.

    • அழைப்பு வரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.
    • லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    டெல்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் செல்கிறார்.

    அயோத்தி ராமர்கோவிலில் கடந்தமாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் அங்கு சென்று வருகிறார்கள். கடந்த 22 -ந்தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

     


    மேலும் அவர் குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட விரும்புவதாகவும் கூறி இருந்தார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர். 

    கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும் கூட ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ராமர் கோவிலுக்கு சென்றார்.

    எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை இன்று புறக்கணித்தனர். பா.ஜ.க., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர்.

    • ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது.
    • கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது.

    இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
    • அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.

    முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

    அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
    • மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்களும், பக்தர்களும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள், 6 மாவட்டங்களுக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டு அயோத்தி செல்ல விரும்புபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பல பகுதிகளில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    கோவையில் இருந்து 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600.

    திருப்பூரில் இருந்து 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600 ஈரோட்டில் இருந்து 11, 16, 21 மற்றும் 26-ந் தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,400.

    சேலத்தில் இருந்து 12, 17, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. கட்டணம் ரூ.2,300.

    மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.3,100.

    21-ந் தேதி மதுரை, 29-ந் தேதி திருநெல்வேலி, 8-ந் தேதி கன்னியாகுமரி, 15-ந் தேதி நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் கேரளா வழியாக செல்லும். நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து ரூ.3,800-ம், நாகர்கோவிலில் இருந்து ரூ.3,700-ம் கட்டணம். 

    • ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதி.
    • அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோதிக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

    இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

    மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.


    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற்றது.
    • ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.

    இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது.
    • கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன.

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழக கோயில் வளாகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவும், இந்து அமைப்புகளும் முயற்சி செய்தது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என அன்றைய தினம் உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பதில் மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன.

    கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×