செய்திகள்
அமித் ஷா

அமித் ஷாவை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள்

Published On 2020-08-04 17:50 GMT   |   Update On 2020-08-04 17:50 GMT
அமித் ஷாவை சந்தித்தப்பின் முன்னெச்சரிக்கை காரணமாக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் மூன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அமித் ஷாவை சந்தித்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்கள் பாபுல் சுபோரியா மற்றும் டெபஸ்ரீ செளத்ரி ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த எம்.பி.க்களான நிசித் ப்ரமானிக், சவுமித்ரா கான் மற்றும் ஸ்வாபன் டாஸ்குப்தா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றபோதிலும், சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News