செய்திகள்
முகமது ஷரீஃப்

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Published On 2020-08-04 11:31 GMT   |   Update On 2020-08-04 11:31 GMT
சொந்தக்காரர்கள் உரிமைக்கோராத 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ள முகமது ஷரீஃப்க்கு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு  மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விழாவுக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.



இந்நிலையில் முகமது ஷரீப் என்பவர் சொந்தக்காரர்கள் உரிமைக்கோராத சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ளார். இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நிலை அனுமதித்தால், விழாவில் கலந்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News