செய்திகள்
அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கு - அத்வானி, 24-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்

Published On 2020-07-21 12:14 GMT   |   Update On 2020-07-21 12:14 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வருகிற 24-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார்.
லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை, லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோ ஷி, கல்யாண்சிங், உமாபாரதி உள்பட 32 பேரை அடுத்தடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

உமாபாரதி, கல்யாண்சிங் போன்றோர் ஏற்கனவே ஆஜரான நிலையில், அத்வானி, வருகிற 24-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார். கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்படுகிறது.

இதுபோல், முரளி மனோகர் ஜோ ஷி, 23-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார்.
Tags:    

Similar News