செய்திகள்
கார் மீது ரெயில் மோதி நிற்கும் காட்சி

பீகாரில் கார் மீது சிறப்பு ரெயில் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2020-07-18 05:25 GMT   |   Update On 2020-07-18 05:25 GMT
பீகாரில் பாட்னா - ராஞ்சி சிறப்பு ரெயில் கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர்.
பாட்னா - ராஞ்சி ஜன்ஷதாப்தி சிறப்பு ரெயில் இன்று காலை போடாஹி - நத்வான் இடையே வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் ஒன்று ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது.

காரை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர் ரெயிலை நிறுத்த முயன்றார். என்றாலும் ரெயில் என்ஜின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் முறைகேடாக ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாகவும், இந்த விபத்தால் ரெயில் போக்குவரத்திற்கு எந்த இடையூறு இல்லை என்றும் இந்திய ரெயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News