செய்திகள்
பாதுகாப்பு படையினர் - கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2020-07-13 15:12 GMT   |   Update On 2020-07-13 15:12 GMT
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின்போது ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.  இரு தரப்பினருக்கும் இடையே 6 மணிநேரத்திற்கும் மேலாக மோதல் நடந்த நிலையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய முதற்கட்ட விசாரணையில், ஒருவன் உள்ளூர் தீவிரவாதி என்பதும் மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.  இதுகுறித்து பேசிய ஜம்மு-காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங், இவர்கள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
Tags:    

Similar News