செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-10 13:53 GMT   |   Update On 2020-07-10 13:53 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.  இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது 3,099 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News