செய்திகள்
உத்தரபிரதேசத்தில் குடியேறுகிறார் பிரியங்கா காந்தி
பிரியங்கா உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
லக்னோ :
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் குடியிருந்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, பிரியங்கா உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஏற்கனவே ஒரு வீட்டை பிரியங்கா வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். இரவு நேரம் தங்கும்வகையில் லக்னோவுக்கு வரும்போதெல்லாம் அவர் அந்த வீட்டில்தான் தங்குவார். கடந்த ஓராண்டில் பலதடவை தங்கி உள்ளார். எனவே, டெல்லியில் வேறு வீட்டுக்கு மாறுவதை விட 2022-ம்் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, உ.பி.யில் காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்தில் அவர் லக்னோவில் குடியேறக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் குடியிருந்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, பிரியங்கா உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஏற்கனவே ஒரு வீட்டை பிரியங்கா வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். இரவு நேரம் தங்கும்வகையில் லக்னோவுக்கு வரும்போதெல்லாம் அவர் அந்த வீட்டில்தான் தங்குவார். கடந்த ஓராண்டில் பலதடவை தங்கி உள்ளார். எனவே, டெல்லியில் வேறு வீட்டுக்கு மாறுவதை விட 2022-ம்் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, உ.பி.யில் காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்தில் அவர் லக்னோவில் குடியேறக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.