செய்திகள்
கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் 127 பேருக்கு பாதிப்பு
கேரளாவில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 127 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளத்தில் 1,450 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.