செய்திகள்
தேர்தல் ஆணையம்

ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 9 மாநிலங்களில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்

Published On 2020-06-01 22:37 GMT   |   Update On 2020-06-01 22:37 GMT
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபாஇடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3, கர்நாடகா 4,   அருணாசல பிரதேசம் 1, மிசோரம் 1 என மொத்தம் 24 இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெறும். ஜூன் 19-ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News