செய்திகள்
பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி

Published On 2020-05-30 18:39 GMT   |   Update On 2020-05-30 18:39 GMT
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்:
 
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலகோட் மற்றும் மெண்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
Tags:    

Similar News