செய்திகள்
கேரளாவில் இன்று 67 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: பினராயி விஜயன் தகவல்
கேரள மாநிலத்தில் இன்று 67 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உள்பட 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.