செய்திகள்
சிறப்பு ரெயில்

வெளி மாநில தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் ரெயில்களில் ஊர் திரும்பினர்

Published On 2020-05-16 23:58 GMT   |   Update On 2020-05-16 23:58 GMT
வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் ரெயில்களில் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வரை 1,074 ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்து உள்ளனர் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களில் தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News