செய்திகள்
நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு

Published On 2020-05-04 03:56 GMT   |   Update On 2020-05-04 03:56 GMT
ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நாளை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் 5-ந் தேதி (நாளை) அறிவிப்பார் என்று அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். அன்றைய தினம் அவர் மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடுவார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
Tags:    

Similar News