செய்திகள்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவம் (கோப்பு படம்)

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

Published On 2020-04-22 03:00 GMT   |   Update On 2020-04-22 04:20 GMT
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். 

சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு மனித குலம் கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு நாசவேலையில் ஈடுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News