செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் 11 அதிகாரிகள் உள்பட 49 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-21 13:45 GMT   |   Update On 2020-04-21 13:45 GMT
மகாராஷ்டிராவில் 11 அதிகாரிகள் உள்பட 49 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,676 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் 11 அதிகாரிகள் உள்பட 49 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News