செய்திகள்
பிரதமர் மோடி, சோனியா காந்தி

சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2020-04-05 10:28 GMT   |   Update On 2020-04-05 13:34 GMT
பாரத பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று பாராளுமன்ற கட்சிகள் தலைவருடன் பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி ஆலோசனை  நடத்துகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முலாயம் சிங் யாதவ், ஆகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திரசேகரராவ், பிகாஷ் சிங் பாதல் ஆகியோருட் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
Tags:    

Similar News