செய்திகள்
கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2020-04-05 06:15 GMT   |   Update On 2020-04-05 06:15 GMT
ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாட்புரா மற்றும் கேரன் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்றனர்.  

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்நிலையில், காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

எல்லையில் அமைந்துள்ள கேரன் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்தியஎன்கவுண்டரில் அங்கு பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News