செய்திகள்
இந்தியன் ரெயில்வே ஊழியர்கள் நிதியுதவி

13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய் வழங்கினர்

Published On 2020-03-29 09:01 GMT   |   Update On 2020-03-29 09:01 GMT
ரெயில்வே துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. இதனால் கொரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரெயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ. 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இணைமந்திரி சுரேஷ் அங்காடி ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
Tags:    

Similar News