செய்திகள்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

நான் இருக்கும்வரை மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இலவசம் - கெஜ்ரிவால் பிரசாரம்

Published On 2020-02-02 17:19 GMT   |   Update On 2020-02-02 17:19 GMT
நான் இருக்கும்வரை மின், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இலவசம் என பா.ஜ.க.வினரிடம் கூறுங்கள் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கிராரி, முந்த்கா, விஷ்வாஸ் நகர், லட்சுமி நகர் மற்றும் ரிதாலா ஆகிய பகுதிகளில் இன்று பேரணியில் கலந்து கொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, விஷ்வாஸ் நகரில் நடந்த கூட்டமொன்றில் அவர் பேசும்பொழுது, பா.ஜ.க.வினர் உங்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரத்திற்கு வரும்பொழுது அவர்களிடம், எங்களுடைய கெஜ்ரிவால் இருக்கும்வரை, பேருந்து பயணம், மின்சாரம், தண்ணீர், பள்ளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவை இலவசம் ஆக கிடைக்கும் என கூறுங்கள் என பேசினார்.

Tags:    

Similar News