செய்திகள்
எல்ஐசி

எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு

Published On 2020-02-01 08:07 GMT   |   Update On 2020-02-01 08:07 GMT
எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் முதலீடு திரும்பப் பெறப்படும். அதன் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.



அவ்வகையில், சில நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் முதலீட்டை திரும்பப் பெறும் பட்டியலில் எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் இணைக்கப்படும். அந்நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி, எல்.ஐ.சி. நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்பது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News