செய்திகள்
ஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்
ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இதற்கிடையே, டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாயாக 1.03 லட்சம் கோடி ரூபாயாக கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 1.10 லட்சம் கோடி ரூபாய் மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் உள்நாட்டு ஜிஎஸ்டி ரூ.86,453 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.23,597 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.