செய்திகள்
கோப்பு படம்

பீகாரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண் கற்பழிப்பு - 2 வாலிபர்கள் கைது

Published On 2020-01-22 05:41 GMT   |   Update On 2020-01-22 05:41 GMT
பீகாரில் ஓடும் ரெயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:

பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த இவர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு ரெயில் நிலையம் சென்றார்.

அங்கு பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஒரு பெட்டியில் அமர்ந்தார். அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. இளம்பெண் தனியாக இருப்பதை பார்த்த இரண்டு வாலிபர்கள் ரெயிலுக்குள் ஏறி அவரை கற்பழித்தனர்.

இந்நிலையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டிப்பிடித்து விசாரித்தபோது அவர் ரெயிலில் இளம்பெண்ணை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.

அவரை கைது செய்த போலீசார், கற்பழிப்பில் ஈடுபட்ட மற்றொரு வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கைமுர் மாவட்டத்தில் உள்ள சாய்தா பகுதியை சேர்ந்த பிரேந்திரபிரகாஷ்சிங்(26), தீபக் சிங் (28) என்பது தெரிய வந்தது.
Tags:    

Similar News