செய்திகள்
துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில் சிஐஎஸ்எப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பலி

Published On 2020-01-14 16:07 GMT   |   Update On 2020-01-14 16:07 GMT
காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் அங்கிருந்த வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News