செய்திகள்
சரத் பவார், உத்தவ் தாக்கரே

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு

Published On 2019-11-24 11:39 GMT   |   Update On 2019-11-24 11:39 GMT
ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
மும்பை:

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள இரு பிரபல ஓட்டல்களில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லலித் ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார்.



பின்னர், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ரெனைசன்ஸ் ஓட்டலுக்கு உத்தவ் தாக்கரே வந்தார்.  அங்குள்ள ஒரு அறையில் சரத்பவாரும் உத்தவ் தாக்கரேவும் சில நிமிடங்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, ’நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நமது கூட்டணி பலமாக இருக்கும். இந்த கூட்டணி நீண்டகாலத்துக்கு தொடரும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Tags:    

Similar News