செய்திகள்
ஒரே ஒரு அறையில் செயல்படும் ஆரம்ப பள்ளி

ஒரே அறையில் 5 வகுப்புகள்- மத்திய பிரதேச ஆரம்ப பள்ளியின் அவலம்

Published On 2019-11-22 03:50 GMT   |   Update On 2019-11-22 03:50 GMT
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், ஒரே அறையில் 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் உள்ள சரோதிபுரத்தில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. பெயர் அளவுக்குத்தான் அது பள்ளியாக உள்ளது. ஆனால், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது வேதனையான விஷயம்.

இதுபற்றி அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அனூப் சிங் கூறுகையில், ‘பள்ளியில் மின்சார  வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மின்சார இணைப்பு வழங்கவோ, தண்ணீர் வழங்குவதற்கோ எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. 



1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புக்கு ஒரே ஒரு அறைதான் உள்ளது. ஒரே அறையில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் அமர வைத்து பாடம் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது’ என்றார்.
Tags:    

Similar News