செய்திகள்
இந்திரா காந்தி - மோடி

இந்திரா காந்தி 102-வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை

Published On 2019-11-19 03:47 GMT   |   Update On 2019-11-19 03:47 GMT
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு தலைவர்கள் டுவிட்டர் மூலம் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்திரா காந்தியின் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். 

‘நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்துள்ளார்.



இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவிடம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது. இதில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், முன்னாள் தலைவர் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாதவ் ராஜீவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News