செய்திகள்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்தார்

Published On 2019-10-18 08:25 GMT   |   Update On 2019-10-18 08:25 GMT
விரைவில் ஓய்வு பெறவுள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பின்னர் அந்த பதவியில் யாரை நியமிக்கலாம்? என்று பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-11-2019 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

அதற்கிடையில், தனக்கு அடுத்தபடியாக இந்த பதவியை யார் ஏற்கலாம்? என்று தலைமை நீதிபதி ஒருவரை சுட்டிக்காட்டுவது மரபாக இருந்து வருகிறது.



அவ்வகையில், தனக்கு அடுத்தபடியாக சுப்ரீம் கோர்ட்டில் மிகவும் மூத்த நீதிபதியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் எஸ்.ஏ.பாப்டே-வின் பெயரை பரிந்துரைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார்.
Tags:    

Similar News