செய்திகள்
காஷ்மீர்: போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்க பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஜம்மு:
சமீபத்தில் அந்த இயக்கத்தில் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் மோஷின் மன்சூர் என்பதும் போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டபடி தகுந்த நேரத்துக்காக காத்திருந்ததாகவும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவன் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்தில் அந்த இயக்கத்தில் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் மோஷின் மன்சூர் என்பதும் போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டபடி தகுந்த நேரத்துக்காக காத்திருந்ததாகவும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.