search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதி கைது"

    • உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பயங்கரவாதி அராபத் அலி என்பவரை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கென்யாவின் நைரோபியில் இருந்து டெல்லி திரும்பிய அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர் 2020-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பிரசாரம் செய்ததாகவும், பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    கர்நாடக மாநில சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த இவர் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி, உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் அராபத் அலிக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்து மீறி நுழையாமல் இருக்க எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கிஷ்ஸ்வார் மாவட்டம் சிரஜ் பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவனது பெயர் முகமது யூசுப் சவுகான் என்பதும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
    • கடந்த மே 10-ந்தேதி ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

    கைதான நபர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்த ஆர்ஷித் அகமது என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 கை துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக ஷால்தெங் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுவினர் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்திக்கொள்வார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ஹைபிரிட் வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கடந்த மே மாதம் 1-ந் தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி யாமின் யூசப்பட் கைது செய்யப்பட்டார்.

    அவர் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதேபோன்று கடந்த மே 10-ந்தேதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுவினர் அவர்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை நேற்று முன்தினம் இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

    பின்னர் நேற்று மாலையில் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் பற்றிய தகவல்களை போலீசாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.
    • அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.

    அவனது பெயர் பரீத் அகமது என்றும் தோடா மாவட்டம் கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ்காரர்களை தாக்குவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் உத்தரவிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சரியான நேரத்தில் பயங்கரவாதிகளை பிடித்ததால் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

    அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×