செய்திகள்
பிரதமர் மோடி- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசினா பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்.
வங்காளதேச தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஷேக் ஹசினா பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை. இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துதல், பொருளாதார மேம்பாடு குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரு நாட்டிற்கும் இடையே வணிக ரீதியில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
வங்காளதேசம், மியான்மர் போன்ற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களை தடுக்கும் விதமாக தேசிய குடியுரிமைகள் பதிவேடு கணக்கெடுப்பு நடைபெற்று அதில் பலரது பெயர்கள் இடம்பெறாமல் உள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் ஹேக் ஹசினா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.