செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்.

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 6 பயணிகள் பலி

Published On 2019-10-03 07:22 GMT   |   Update On 2019-10-03 07:22 GMT
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சாகத்தர்பூருக்கு பஸ் ஒன்று சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நள்ளிரவு ரெய் சன் மாவட்டம் ரிச்ஹன் ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறி துடித்தனர்.

தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பயணிகளை மீட்டனர். அப்போது 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. 18 பேர் படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News