நியூயார்க் நகரில் விமானங்களை மோதி இரட்டை கோபுர கட்டிடங்களை தகர்த்த பயங்கரவாத தாக்குதல் தினத்துக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, இன்று பயங்கரவாதம் என்பது நாட்டின் எல்லைகளுக்குள் கட்டுப்படாத ஒரு சித்தாந்தமாகவே மாறிப்போய் உலகளாவிய பிரச்சனையாக ஆகிவிட்டது குறித்து வேதனை தெரிவித்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (11-9-1893)உலக சமாதானம் தொடர்பாக தனது வரலாற்று சிறப்புமிக்க உரையை சுவாமி விவேகானந்தா சிகாகோ நகரில் ஆற்றினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே செப்டம்பர் மாதம் 11-ம் தேதி உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என மோடி குறிப்பிட்டார்.