செய்திகள்
மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவர் 2006 முதல் 2011 வரை முதல் மந்திரியாக பதவி வகித்தார்.
இந்நிலையில், கொல்கத்தா நகரில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.