என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவமனையில் அனுமதி"
- ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.
- வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வசிஷ்டபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள காட்டுபகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இயற்கை உபாதைக்காக ெசன்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதே போல மறுநாளும் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்தார். இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசில் அந்த பெண் தனக்கு மாலைக்கண்நோய் இருப்பதால் தன்னை பலாத்காரம் செய்த வாலிபர் பற்றி தனக்கு தெரியாது என்று போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- கோட்டங்காய் எனப்படும் ஒரு விஷக்காயின் விதையை 5 பேரும் உடைத்து தின்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
- நள்ளிரவில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
தருமபுரி,
தருமபுரி அருகே பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் மோனிகா (வயது 6), மகன் உதயகார்த்தி(7).
இந்த குழந்தைகள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் கலையரசு(8), மற்றும் சரத்(6),ஹேமாஸ்ரீ (6) ஆகிய 5 பேரும் நேற்று மாலை விளையாட சென்றுள்ளனர். அப்போது கோட்டங்காய் எனப்படும் ஒரு விஷக்காயின் விதையை 5 பேரும் உடைத்து தின்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நள்ளிரவில் 5 குழந்தைகளும் தங்களது வீடுகளில் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய்,தந்தையர் அலறி அடித்துக்கொண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு நள்ளிரவு 2.30 மணியளவில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ஒரே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
- கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.
இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்