செய்திகள்
மகாராஷ்டிரா விபத்து

மகாராஷ்டிரா: துலி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல்- 11 பேர் பலி

Published On 2019-08-19 02:32 GMT   |   Update On 2019-08-19 02:32 GMT
மகாராஷ்டிரா துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
மும்பை:

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News