செய்திகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர்.

எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் விரட்டியடிப்பு

Published On 2019-08-06 08:37 GMT   |   Update On 2019-08-06 08:37 GMT
ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.30 மணியளவில் 500 மீட்டர் தொலைவில் 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதைக்கண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், இந்திய ராணுவ வீரர்களை சமாளிக்க முடியாமல் தப்பியோடினர்.

இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News