செய்திகள்
இப்படியொரு காரணத்திற்காக ஆர்டர் செய்த உணவு கேன்சல்.. -சொமாட்டோ பதிலடி
சொமாட்டோ வாடிக்கையாளர் ஒருவர், ஒரு காரணத்தை கூறி உணவை கேன்சல் செய்துள்ளார். இதற்கு அந்நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.
ஜாபல்பூர்:
ஹோம் டெலிவரி ஆப் மூலம் வீட்டில் இருந்தபடியெ உணவை ஆர்டர் செய்து உண்பது இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி ஆர்டர் செய்த உணவை சில காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்வதும் வழக்கம்தான்.
அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.
எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போதுதான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
எனது உணவிற்கு இந்து அல்லாத ஒருவரை டெலிவரி பாயாக அனுப்பியுள்ளனர். வேறு ஒருவரை மாற்ற முடியாது என்றும் கூறினர். மேலும் டெலிவரிக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கூறினர். எனவே, எனது ஆர்டரை கேன்சல் செய்து, அந்த பணம் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டேன்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ இந்தியா நிறுவனம் அவர் வெளியிட்ட பதிவை, தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரே வரியில், ‘உணவுக்கு மதமில்லை’ என குறிப்பிட்டுள்ளது.