செய்திகள்
மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெரும் குழந்தைகள்

அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி

Published On 2019-07-20 20:46 GMT   |   Update On 2019-07-20 20:46 GMT
அசாமில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
கவுகாத்தி:

பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று உயிரிழந்தன.

இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.
Tags:    

Similar News